Description
கிராமத்து மண்ணில் நடந்து திரிந்தவனுக்குள் எழுதித் தீர்க்க முடியாத கதைகள் ஏராளம் இருக்கும். அப்படித்தான் எனக்குள் என் ஊரும், கோவில்களும் வயல்களும், கண்மாய்களும், திருவிழாக்களும், உறவுகளும் ஏராளமான கதைகளுக்கான களத்தை நிரப்பி வைத்திருக்கின்றன. எழுத எழுதத் தீராதவை இவை.... முடிந்தவரை எழுதிக்கொண்டே இருப்பேன் இன்னும் இன்னுமாய் வாழ்க்கை கதைகளை...