Description
வழிபாடுகள் ஒருபக்கமும் போக ஸ்த்ரீகளுடனான சம்போகம் மறுபக்கமுமாக இரட்டை மனநிலையோடு, முதுகெலும்பைக் கும்பெனியர்களிடம் அடகு வைத்து விட்டு வாழ்ந்து முடித்த தஞ்சை மராட்டிய அரச வம்சத்தின் இதுவரை சொல்லப்படாத கதை. புனைவும் வரலாறும் தன்னளவில் பிணைந்து உருவான ஓர் அரச வம்சத்தின் வீழ்ச்சியின் இந்தப் பின்னணி. தமிழ்ப்புதின உலகில் இதுவரை பேசப்படாத புதிய களம்.