Description
கருமை நிறக் கண்ணன்: மலையாளத்தில் 'ஸ்யாமா மாதவம்' என்ற தலைப்பில் கவிஞர் பிரபா வர்மா எழுதியுள்ள குறுங்காவியம். புதுமையான ஒரு கோணத்தில் கண்ணனை விசாரணைக்கு உள்ளாக்குகிறார் கவிஞர். கண்ணனின் மரணத் தறுவாயில் தன் குற்றங்களுக்கான ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மன்னிப்பையும் கோருகிறான் கண்ணன். பிரபா வர்மா: கவிஞர், பத்திரிகையாளர், திரைப்பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். பிரபா வர்மா. மரபுக் கவிதையில் ஊன்றி நவீனத்துவச் சிறகுகள் விரிப்பவர் கவிஞர். இலக்கியத்திலும் சட்டத்திலும் பட்டம் பெற்றவர். திருவல்லாவைச் சேர்ந்த காடப்பிர கிராமத்தில் 1959 இல் பிறந்த கவிஞர் மாணவப் பருவத்திலேயே சமூகச் செயற்பாட்டாளராக விளங்கியவர்.