Description
ரியாஸ் முதல் தொகுப்பிலேயே தேர்ந்த சொற்சிக்கனத்தோடு அனைத்துக் கவிதைகளையும் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கவிதைகளை மொத்தமாக வாசிக்கிறபோது அவருக்கு வாழ்வின் மீது புகாரோ, எதிர்பார்ப்போ எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 'இன்னும் கொஞ்ச நேரம் கடல் பார்த்துக் கொள்கிறேன் ; உங்கள் குண்டுகளை அதற்குப் பிறகு போட்டுக் கொள்ளுங்களேன்' என்கிற குழந்தைத்தனமான வேண்டுகோள்களை மட்டுமே அவர் கவிதைகள் சுமந்து கொண்டிருக்கின்றன.
- எழுத்தாளர் மானசீகன்