Description
நால்வரின் கையொப்பம். ஆசிரியர்: சர் ஆர்தர் இக்னேஷியஸ் கோனான் டாயில் தமிழில். சிவ முருகேசன்
இது ஆர்தர் கோனான் டாயிலின் இரண்டாவது ஷெர்லக் ஹோம்ஸ் நாவல். ஒளித்து வைக்கப்பட்ட ஒரு புதையலையும், ஒரு கொலையையும் சூழ்ந்திருக்கும் மர்மத்தை துப்புத் துலக்கி கண்டுபுடிக்கிறார் ஷெர்லக் ஹோம்ஸ்.
முடிவில் குற்றவாளிகளில் சிலர் கைது செய்யப்படுகிறார்கள்; சிலர் உயிரிழந்து போகிறார்கள்.
இந்திய மண்ணில் சிப்பாய்க்கலகம் நடந்த காலகட்டத்தில் நிகழும் இக்கதை பேராசையும், துரோகமும் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கி பயத்தையும் பதற்றத்தையுமே பரிசளிக்கும் என்பதை உணர்த்துகிறது.
திகிலும் பீதியும் பின்னும் வலையில் நம்மை சிக்கித் தவிக்க வைக்கிறது கதையின் நகர்வு.