Description
தமிழ் நாட்டில் பண்டைக் காலத்திலும் இடைக்காலத்திலும் இருந்த அரசுகளின் (state) தன்மை பற்றிய கோட்பாடுகள் இன்று தீவிரமாகச் சிந்திக்கப்பட்டு வருகின்றன. இச்சிந்தனை வளமுற வாணர் போன்ற குறுநிலமரபுகளின் அரசியல் சமுதாய நடவடிக்கைகள் பற்றித் தெளிவாக அறிந்து கொண்டால்தான் இயலும். அந்த முறையில் முனைவர் வெ. வேதாசலம் அவர்களின் முயற்சி பாராட்டிற்குரியது. ஆசிரியர் வெளியிட்டுள்ள சில கருத்துக்கள் மேலும் ஆய்வுக்கு இடம் தருகின்றன. இடைக்காலச் சமுதாய அமைப்பை மேலும் ஆழமாக ஆராயவும் மேற்கொண்டு செய்ய வேண்டிய ஆய்வுக்கு இந்நூல் உறுதுணையாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
- எ. சுப்பராயலு