அர்த்தமுள்ள இந்துமதம்


Author: கவிஞர் கண்ணதாசன்

Pages: 800

Year: NA

Price:
Sale priceRs. 650.00

Description

புத்தகத்தில் அருமையான தத்துவங்கள்:

  • எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்., அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுரை கூறும் அருகதை எனக்கு உண்டு" என்று ஆரம்பிக்கிறார்.
  • 'இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?' என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.
  • பேசத்தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.
  • கடலின் ஆழமான பகுதிய்ல் அலை இருக்காது.
  • வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப்பாருங்கள் பயங்கரக்காற்று அடிக்கும்.
  • வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட கார் மேகத்தின் வேகம் குறைவு.
  • நாய் ஓடுவதை விட யானை நடப்பதில், வேகம் அதிகம்.
  • சலனமற்ற மெளனம் பல அர்த்தங்களைக் கொண்டது.
  • பேசாமல் இருப்பவனே பெரிய விஷயத்தைச் சொல்பவன், பேசிக்கொண்டிருப்பவன் ஞானக்கிறுக்கன்.
  • ஆரோக்கியத்திற்கு மெளனம் மிக அவசியம்.
  • தவம் புரிகின்றவன் 'ஓம் நமசிவாய" என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை.

அருமையான வரிகள்:

1. மரணமோ, சரித்திரத்தில் மகத்த்தான மணி மண்டபமாக்க் கருதப்படுகிறது.உயர்ந்தோர்,நல்லோர்,பெரியோர்கள்.ஞானிகள்-

2. இந்த வார்த்தைகளில் பாரத்த்தன் முழு வரலாறுகளும் அடங்கிக்கிடக்கின்றன.

3.அந்த விளக்குகள் ஒளியைத் தந்தன; நாம் வாழ்க்கைக் கண்டு கொண்டோம்.

4.அந்தக் கைகாட்டிகள் பாதையைக் காட்டின; நாம் போக வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம்.

5. அந்த மேகங்கள் மழை பொழிந்தன; நாம் நமது நிலங்களைச் செழுமையாக்கிக்கொண்டோம்.

கவியரசு கண்ணதாசன் வாழ்க்கை குறிப்பு :
  • பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
  • பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
  • மரபு - தன வணிகர்
  • இயற்பெயர் - முத்தையா
  • உடன்பிறந்தோர் - எண்மர்
  • கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
  • உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
  • 1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
  • 1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
  • 1944 - முதற் கவிதை - முதற் கவிதை
  • 1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
  • 1949 சண்டமாருதம் ஆசிரியர்
  • 1949 திரைப்படத் துறை பயிற்சி
  • 1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி,
  • பாடல் கலங்காதேதிருமனமே
  • 1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
  • 1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
  • 1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
  • 1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
  • 1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
  • 1956 முல்லை இலக்கிய மாத இதழ்
  • 1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
  • 1957 - திரைப்படத் தயாரிப்பு - - மாலையிட்ட மங்கை
  • 1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
  • 1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
  • புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
  • தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
  • 1962-63இல் காங்கிரஸில் இணைப்பு
  • மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
  • 1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
  • 1970 - ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
  • 1971, 1975 - மலேஷியா பயணம்
  • 1978 - அரசவைக் கவிஞர்
  • 1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
  • 1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
  • 1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
  • இறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
  • புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
  • குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.

You may also like

Recently viewed