Description
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்ட வரலாறு குறித்த ஆய்வுத் தொகுப்பு நூல். இம்மாவட்டம் குறித்து இதுவரை வெளிவந்துள்ள அனைத்து ஆராய்ச்சி நூல்கள், வெளியீடுகள், கல்வெட்டுகள் மற்றும் இதர தரவுகள் அனைத்தும் நன்கு ஆராயப்பட்டும், கள ஆய்வுகள் நடத்தியும் சிறந்த வரலாற்றுக் காவியமாக ஆவணப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் தீபக் (எ) தேவஜெயன்.போளூர் வட்டத்தின் அரசியல் பொருளாதாரம், மக்கள் வாழ்க்கை, பண்பாடு, சைவ வைணவத் தலங்கள், மகான்கள், சித்தர்கள், கலை, இயற்கை வளம், விவசாயம், மலைவாழ் மக்களின் சமூக பொருளாதார நிலைகள், கல்வி, உள்ளாட்சி அமைப்புகள் போன்ற அனைத்து விவரங்களும் கவனத்துடன் திரட்டப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது.நாட்டின் வரலாறு மாவட்டத்தின் வரலாறு என்ற நிலைக்கு கீழ் ஓர் ஊரின் வரலாறு, நுண் வரலாற்று ஆய்வு ஆகும். இவ்வரலாற்றுத் தொகுப்பு மாவட்டக் கையேடு என்ற தகுதியைப் பெற்று ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களக்கும், மாவட்ட நிர்வாகத்தினருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நன்கு பயன்படும் என்பதில் ஐயமில்லை.நன்றி: தினத்தந்தி, 26/2/2014.