Author: ஏக்நாத்

Pages:

Year: 2014

Price:
Sale priceRs. 250.00

Description

ஒரு மலையடிவார கிராமத்தின் வாழ்வை காட்டின் வழி அசைபோடவைக்கும் நாவல். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்து கிராமம் கீழாம்பூர். ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலத்தில் போதிய உணவு கிடைக்காதபோது குள்ராட்டி காட்டிற்கு மாடுகளை அழைத்துப்போய் கிடைபோட வைக்கிறார்கள்.காடு மனிதர்களையும், ஆடுமாடுகளையும் உள்வாங்கிக்கொள்கிறது. அந்த கிராமத்தின் வாழ்வு காட்டிற்குள் காட்சிப்படுத்தப்படுகிறது. கிடைக்குத் தலைமை தாங்கும் நொடிஞ்சான் குட்டி, குள்ராட்டிக்கு கிடைபோடச் செல்லும் உச்சிமகாளி, கந்தையா, இராமசுப்பு, சேகரி, தவிட்டான் என்று ஒரு கிராமத்தின் அத்தனை பிரதிநிதிகளையும் மண்மணம் மாறாமல் தந்துவிட்டார்.கிணற்றுக் குளியல் முதல் பஞ்சாயத்துவரை ஒரு மலையடிவாரக் கிராமத்தின் அனுபவத்தை கிடைக்காடு விழ சொல்லியிருப்பது தமிழ் நாவலுக்கு புதிது. அடுத்த தலைமுறைக்கு கிராமத்தை எடுத்துச் செல்லும் முயற்சி சிறப்பு.

You may also like

Recently viewed