இவர்தான் சந்துரு!


Author: தொகுப்பு: நிதர்ஸனா

Pages: 128

Year: 2014

Price:
Sale priceRs. 150.00

Description

சில நீதிபதிகள் பிறப்பிக்கும் தீர்ப்புகளும் உத்தரவுகளும்தான் அடிக்கடி ஊடகங் களில் செய்திகளாக வரும். சட்டத்தின் வரையறைக்கு உட்பட்டு, அதே நேரத்தில் மக்களின் நலன்களை முதன்மையாகக் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்படும் தீர்ப்புகள் எப்போதுமே மக்களின் கவனத்தைப் பெறும்.

அத்தகைய நீதிபதிகளில் சிலர் தங்கள் பதவி ஓய்வுக்குப் பிறகும்கூட தொடர்ந்து மக்களால் போற்றப்படுகிறார்கள். சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் பதவிக் காலத்திலும், ஓய்வுக்குப் பிறகும் அவர்கள் காட்டும் அக்கறையே அதற்குக் காரணம். அத் தகைய நீதிபதிகளில் முதன்மையாக இருப்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு என்பதை உரக்கச் சொல்கிறது `மணற்கேணி' பதிப்பகம் வெளியிட்டுள்ள `இவர்தான் சந்துரு' என்ற நூல். கட்டுரைகள், உரைகள், நேர் காணல்கள், கேள்வி-பதில்கள் என பல்வகைத் தொகுப்பாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

You may also like

Recently viewed