Description
குணா கவியழகனின் விடமேறிய கனவு. சாட்சியம் இன்றி அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் இனப்படுகொலை யுத்தத்தின் சொல்லப்படாத அவலங்களின் பக்கங்களை வலிகள் குன்றாமல் எடுத்து வந்திருக்கும் இந்த காலத்தின் அற்புதமான போர் இலக்கியம்! நாவலின் முன்பாகம் கதை சொல்லியின் அனுபவங்களை கோர்த்து இரத்தம் உறைய வைக்கும் சிங்கள இராணுவத்தின் சிறைச்சாலை சித்திரவதை விசாரணை கொடுமைகளை கண்ணீர் பெருகி ஓடும் வகையில் சொல்கின்றது. கைதிகளான போராளிகளின் மன உணர்வு போராட்டங்கள் சித்திரவதை வலிகளை சொல்லு சொல்லாக சமகாலத்தில் கண் முன்னே கொண்டு வந்து வலிகளை துல்லியமாக உணரும் வகையில் துன்பம் தோய்த்து சொல்லும் திறன் மிக சிறப்பானது. தத்துவார்த்த சிந்தனைகள் பரவலாக நூலை மனதோடு இருத்தி வலித்தாலும் மூடி வைக்காமல் தொடர்ந்தும் படிக்க வைக்கின்றது.