Description
அன்னா கரீனினா - லியோ டால்ஸ்டாய்*
*அன்னா கரீனினா* எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான மாபெரும் எழுத்தாளன் *டால்ஸ்டாயின்* படைப்பு.
நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் - குடும்ப அமைப்புக்கும் இடையேயான உறவென்ன? என்பதுதான்!.
காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா?
காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா?
அப்படி இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்?
உண்மையான தீவிரமான நேசம் என்பது ஒழுக்கக் கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா?
காதலும் - காமமும் எங்கே துவங்குகின்றன?எங்கே பிரிகின்றன?
போன்ற பல கேள்விகளை மையக்கேள்வியை ஒட்டி டால்ஸ்டாய் விரித்துக்கொண்டே செல்லும் நூல்தான் *அன்னா கரீனீனா*.
லியோ டால்ஸ்டாயின் நாவல்கள் வெறும் மானுடசித்திரங்கள் மட்டுமல்ல.
அவை ரஷ்யப் பண்பாட்டின் - ருஷ்ய நிலத்தின் - ருஷ்ய வரலாற்றின் பதிவுகள் ஆகும்.
இந்நூலை வாசிக்கும் வாசகனுக்கு ரஷ்யாவில் வாழ்ந்து மீண்ட அனுபவத்தை அளிக்கும்.