சினிமாவின் மறுபக்கம் பாகம்-2


Author: ஆருர்தாஸ்

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 250.00

Description

சினிமா உலகில் அதிகப் படங்களுக்கு வசனம் எழுதியவர், ஆரூர்தாஸ். 1000 படங்களுக்குமேல் (டப்பிங் படங்கள் உள்பட) வசனம் எழுதி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய அளவுக்கு உலக சாதனை புரிந்தவர். திரை உலகில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் ஒரே நேரத்தில் வசனம் எழுதியது இவரது இன்னொரு சாதனையாகும். திரை உலகில் இவர் நீண்ட காலம் பவனி வந்ததால்
இவர் பழகாத நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள், பாடகர்கள், பாடகிகள் இல்லையென்றே சொல்லலாம். நாம் திரையில் பார்க்கும் சினிமா கதைகளை விட, திரை உலகப் பிரமுகர்கள் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தவை. அவற்றை அறிந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஆரூர்தாஸ். அவர் தனது திரை உலகப் பயணத்தையும், அதோடு சினிமாவின் மறுபக்கத்தையும் “தினத்தந்தி”
பத்திரிகையில் 102 வாரங்கள் தொடர்ந்து தொடர் கட்டுரையாக எழுதி வந்தார். இதில் வெளியான கட்டுரைகளின் ஒரு பகுதியைத் தொகுத்து “சினிமாவின் மறுபக்கம் ” என்ற தலைப்பில் தினத்தந்தி பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது.

You may also like

Recently viewed