Description
“சுயசார்புடன் விளங்க அத்துனை வளங்களையும் இந்தியா தன்னகத்தே பெற்றுள்ளது. அந்த வளங்களை முறையாகப் பயன்படுத்தவும், உலகிற்கே முன்னோடியான சுயசார்பு நாடாக சிறக்கவும் சிறு, குறு தொழில்முனைவோர்களின் சரியான முன்னெடுப்பு அவசியம். அத்தகைய சிறு மற்றும் குறுந் தொழில் முனைவோர்களுக்கு பிசினெஸ்-ஐ வெற்றிகரமாக நடத்த உதவும் வணிக நுணுக்கங்களை இந்நூல் எளிய மொழியில் திறம்பட வழங்குகிறது. தொழில் செய்வோர் யதார்த்தத்தில் சந்திக்கும் பற்பல சவால்களை எப்படிக் கையாள்வது என்பதை உதாரணங்களோடு விளக்கியிருப்பது அருமை. தொழில் முனைவோர் மட்டுமின்றி தொழில் முனைவதில் ஆர்வம் உள்ளோரும் கட்டாயம் வாசித்துப் பயன் பெறவேண்டிய புத்தகம் இது."
- சதீஷ்குமார் வெங்கடாசலம், துணை ஆசிரியர் - கல்வி மலர், தினமலர், சென்னை