Description
தொழில்நுட்பம் இசைத்துறையை கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரத்துக்கு நகர்த்திச்சென்றுவிட்டது இன்று. ஆனாலும் எல்லாவற்றுக்கும் இலக்கணமென சில அடிப்படைகள் உண்டு. அந்த அடிப்படையின் மேல்நின்றுதான் எதுவும் இயங்கவியலும். கணினி யுகம் திரை இசையை எளிதான ஒன்றாக மாற்றியிருக்கலாம். ஆனால், சினிமா அறிமுகமான காலகட்டங்களில் இந்த ராஜபாட்டையைக் கட்டமைத்தவர்கள், தங்களை முற்று முழுதாக அர்ப்பணித்துக்கொண்டார்கள். அப்படியான மூன்று இசை ஆளுமைகளான எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் கலையுலகப் பயணத்தை ஈர்ப்பான மொழியில் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் பி.ஜி.எஸ்.மணியன்.