Description
தினத்தந்தி அதிபர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனார் வாழ்க்கை வரலாறை சுருக்கமாக சொல்லும் நுால்; 27 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் தொடருக்கு ஏற்ப, சி.பா.ஆதித்தனாரின் பத்திரிகை கொள்கையை அப்படியே பின்பற்றினார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.
அத்தியாயங்களின் நிறைவில் சி.பா.ஆதித்தனாரின் படமும், அவரது பொன்மொழிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பேசுவதில் மட்டும் அல்ல, எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்றவர் வானொலி அண்ணா என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்த நுால்.