Description
சமூக இயக்கத்தைக் கணித்து, பல்வேறு சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். காவல் துறையில் உயர் பொறுப்பு வகித்தவரின் சமூக பார்வையும், பொறுப்புணர்வுள்ள கடமையும் வெளிப்பட்டுள்ளது.
மொத்தம், 29 கட்டுரைகள் உள்ளன. பெரும்பாலும், ‘தினமலர்’ நாளிதழ் சிந்தனைக்களம் பகுதியில் பிரசுரமானவை. தீயவர்களின் செயலால் மட்டுமே, சமுதாயம் கொடுமை அனுபவிப்பதில்லை; அவற்றை பார்த்தும் தட்டிக் கேட்கும் வாய்ப்பு இருந்தும், செயல்படாமல் இருக்கும் மெத்தனத்தால் தான், பல கொடுமைகள் நிகழ்கின்றன என, பொறுப்புக்கு இலக்கணம் வகுத்து துவங்குகிறது.
துணிவில்லாத அதிகாரிகளால் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள் என்ற தலைப்பில் முதல் கட்டுரை உள்ளது. இதில் அதிகாரிகளை மொத்தமாக குற்றம் சாட்டவில்லை; பிரச்னையின் கோணத்தை மிக துல்லியமாக அணுகி, மக்களுக்காகத்தான் சட்டம் இயற்றப்படுகிறது என்பதை வலியுறுத்தியுள்ளார்.