Description
சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய ‘மங்களம்’ நாவலைச் சமீபத்தில் படித்தேன். எளிய குடும்பத்தில் பிறந்த படிப்பறிவில்லாத பெண் ஒருவர், தன்னந்தனியாகப் போராடி, ஒரு வழக்கில் வெற்றி பெறுவதை இயல்பாக எழுதியுள்ளார். போராடி பெற்ற ஜீவனாம்சம் வேண்டாம் என அந்தப் பெண் எடுக்கும் முடிவு அழுத்தமானது.
கீழத்தஞ்சை மாவட்டத்தின் தென்பகுதியிலுள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் வாழ்க்கையை ‘சுந்தரவல்லி சொல்லாத கதை’ எனும் நாவலாக எழுதிவருகிறேன். 85 ஆண்டுகளுக்கு முந்தைய விவசாயக் குடும்பங்களின் வாழ்க்கை முறையையும், இதுவரை நாம் அறிந்திராத விவசாயச் செயல்முறைகளையும் இந்த நாவலில் பதிவு செய்துள்ளேன்.