Description
மாக்காளை ஐம்பது வருடங்களுக்கு முந்தைய கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற வகையில் வித்தியாசமான நாவல், மாக்காளை அசை போடுதல் போல காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்து நினைவுகளை அசையாடுகிறார் கலாப்ரியா. உரையாடலை விட நனவோடை உத்தியில் அதிகம் நகரும் கதை வள்ளியிடமிருந்தோ,
வடிவிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தேனும் இந்தக் கதையை மீண்டும் ஆரம்பிக்க முடியும். பக்க அளவில் நாவல்கள் முடிந்து விடுகின்றன. கதைகள் எப்போதும் முடிவதில்ல.
கலாப்ரியாவிடம் சொல்லாத கதைகளும் வானம் என்றே தோன்றுகிறது. அடுத்த நாவலுக்கு அதிகம் காத்திருக்க வேண்டியதில்லை.