சாணக்கியன் பாகம் 2


Author: என். கணேசன்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 460.00

Description

தனியொரு மனிதன், சர்வ வல்லமையுள்ள மகதப் பேரரசனை எதிர்த்து நின்று, அவனை ராஜ்ஜியத்தில் இருந்தே அகற்றுவேன் என்று சபதமிடுவதைக் கண்டு, பைத்தியம் என்றே பலரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் தோல்வியே அறியாத அலெக்ஸாண்டரும் பாரதத்திற்குப் படையெடுத்து வந்தான். இந்த இரண்டு வலிமை மிக்க எதிரிகளையும் ஜெயிக்க விடாமல் தடுத்து, முன்னொரு காலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தன் மாணவன் சந்திரகுப்தனை மகத அரியணையில் அமர்த்தி, பின் ஒன்றிணைந்த பாரதம் உருவாக்குவது என்று ஒரு ஏழை ஆசிரியன் முடிவெடுத்தது கற்பனையிலும் சாத்தியமாக வாய்ப்பில்லை தான். ஆனால் எண்ணத்தில் வலிமையும், அறிவில் உச்சமும் கொண்டிருந்த சாணக்கியன், இது வரை உலகில் யாரும் சாதித்திராத சரித்திரம் படைத்தது எப்படி? ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியது எப்படி? விறுவிறுப்புக்காகவும், சுவாரசியத்திற்காகவும் மட்டுமல்லாமல், மகத்தான வெற்றியைப் படிப்படியாக அடைவது எப்படி என்பதை அறியவும் சாணக்கியனைப் படியுங்கள்!

You may also like

Recently viewed