Description
தற்போது விட்டல்ராவும் பாவண்ணனும் பெங்களூர்வாசிகள். இருவரும் தொடர்ந்து உரையாடி வருபவர்கள். இந்த உரையாடல்களின் சாரமே இந்த நூல். விட்டல்ராவ் என்ற இலக்கிய ஆளுமையின் ஒட்டுமொத்த சித்திரத்தை இந்நூல் வரைந்து காட்டுகிறது. அவரது அகவாழ்க்கையை அறிமுகப்படுத்துகிறது, அவரது ஆக்கங்களை தேடிப்பிடித்து படிக்க வைக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இந்த நூல் எண்பது வயதை நிறைவு செய்துள்ள ஆற்றல்மிகு எழுத்தாளருக்கு அடுத்த தலைமுறை எழுத்தாளரான பாவண்ணன் அகம் குழைந்து அளிக்கும் பாராட்டுப் பனுவல்.