Description
பிரபலமான நூல்களை மொழிபெயர்த்து தமிழுக்கு அளித்த கவிஞர் புவியரசு, அவ்வப்போது வெளியாகும் பிரபலமான நூல்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வந்திருக்கிறார். அந்தவகையில் கவிஞர் புவியரசு, பல்வேறு நூல்களைப் பற்றி எழுதும்போது வாசகர்களையும் ஒரு கதாபாத்திரம்போல அரவணைத்துக்கொள்கிறார். குறிப்பாக, ஞானதாம் கொண்டவர்களின் சிந்தனைக் களஞ்சியமாக மிகெய்ல் நைமி எழுதிய ‘மிர்தாவின் புத்தகம்’ என்ற நூலில் எழுதப்பட்ட சிக்கலான ஆங்கிலப் பதங்களுக்கு, தான் வழங்கிய இலகுவான மொழிபெயர்ப்பை பலரும் பாராட்டியதை நினைவுகூர்கிறார். இப்படி, தான் படித்த பல புத்தகங்களையும் கட்டுரைகளாக சுவைபட இந்நூலில் கொடுத்திருக்கிறார் கவிஞர் புவியரசு.