Description
சங்க இலக்கியமான பரிபாடலில் பெயர்சுட்டிச் சொல்லப்படும் திருமால் திருப்பதி - அழகர் கோயில். இதை சிலப்பதிகாரம் திருமால் குன்றம் என்கிறது. இக்கோயிலின் வரலாற்றைத் திருப்பிப் பார்ப்பதன் மூலம் ஆன்மீக எல்லையைதாண்டி சமூக தளத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறார் தொ.ப. பண்பாட்டு ஆய்வுகளையும், கோயிலுடன் தொடர்பு கொண்ட மக்களின் சமூக வரையறைகளாகவும் நெறிப்படுத்துகிறார். சமூக வரலாறு அழகர் மூலம் மேலும் விரிவுபடுகிறது.