Description
கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் தன் சகோதரன் அட்டதத்தனால் ஈழத் தீவிலிருந்து நாடு கடத்தப்படும் இளவரசன் மானவன்மன், மாமன்னர் நரசிம்ம பல்லவரிடம் தஞ்சம் புகுந்து, புலிகேசியை வீழ்த்துவதில் அவருக்கு உதவுகிறான். ஈழ இளவரசர்கள் அட்டதத்தன், மானவன்மனுக்கிடையே எழுந்த பூசல்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சரித்திர நாவல் இது.