Description
மொழியை வளர்ப்பதும் கட்டிக் காப்பதும் நமக்கு உயிரோம்பலை நிகர்த்த கடமைகள். அவ்வழித்தடத்தில் செல்லும்போது எதிர்ப்படும் கல்லும் முள்ளும் கற்பாறைகளும் கடிவிலங்குகளும் எவரையும் ஒரு நொடியில் வீழ்த்திவிடுபவை. அத்தகைய எதிர்ப்புகளுக்கும் எள்ளல்களுக்கும் எதிர்வினையாற்றியபடி தடம்பிறழாது நடந்த நடைக்குறிப்புகள் இவை. மொழிமக்கள் பெற வேண்டிய விழிப்புணர்வையும் அடிப்படை அறிதலையும் புகட்டும் நூல்.