Description
கல்வி கற்பதற்கு எட்டயபுரம் அரண்மனையின் பொருளுதவி வேண்டி, பதினைந்து வயதுச் சிறுவனாக எழுதிய கவிதைக் கடிதம் முதல், இறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பு குத்தி கேசவப்பிள்ளைக்கு எழுதிய கடிதம் வரை, பாரதி எழுதிய இருபத்துமூன்று கடிதங்களின் அரிய தொகுப்பு இந்நூல். 'பாரதி புதையல் திரட்டுகள்', 'சித்திர பாரதி' ஆகிய நூல்களை வழங்கிய பாரதி அறிஞர் ரா. அ. பத்மநாபன் (1917) அவர்களின் முயற்சியில் உருவான நூலின் செப்பமான புதிய பதிப்பு.