Description
தமிழின் இரண்டாயிரமாண்டுச் சிறப்புடைய கவிதை மரபு தொடர்கின்றது. பால் அடிப்படையில் உடல்களை வேறுபடுத்தி, பெண்ணுடல்களை அதிகாரம் செய்திடும் சமூகச் சூழலில், சங்க காலத்திலிருந்து பெண் தனக்கான மொழியில் கவிதை படைத்துக் கொண்டிருக்கின்றாள். அவை அன்பின் தேடல்களாகவும் பிரிவின் காத்திருத்தலாகவும் வெளிப்படுகின்றன. பக்தியை முன்னிலைப்படுத்தும் கவிதையிலும் பெண்ணின் மனம் நுண்மையாகப் பதிவாகியுள்ளது. தமிழ்ப் பெண் கவிஞர்களின் செவ்வியல் கவிதைகளை இத்தொகுப்பு நூல் அறிமுகம் செய்கின்றது.