Description
''பெரிய எழுத்துப் புத்தகங்கள்'', ''குஜிலி நூல்கள்'', ''காலணா, அரையணா பாட்டுப் புத்தகங்கள்'', ''தெருப்பாடல்கள்'' என்று பலவாறாக அழைக்கப்பட்ட வெகுசன இலக்கியக் கருவூலம் பற்றிய முதல் நூல் இது. மெல்லியதாளில், மலிவான அச்சில், பெரிய எழுத்தில், பல்வேறு பொருள்கள் பற்றி 19ஆம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வெளியான வெகுசன இலக்கியம் குறித்த விரிவான ஆய்வு. இவ்விலக்கியத்தின் தன்மை, உருவாக்கம், உள்ளடக்கம், இயற்றியோர், வெளியிட்டோர், பரப்பியோர், வாசகர்கள், வாசிப்பு முறை ஆகியவற்றை இந்நூல் விரிவாக ஆராய்கிறது. துண்டு துணுக்குகளாகப் பல்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கும் அரிய செய்திகளைக் கொண்டு சுவையாகவும் விறுவிறுப்பாகவும் எழுதப்பட்ட நூல் இது.