Description
1900-1925 காலகட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்களால் பரபரப்பாகப் பேசப்பட்ட சமூகம் சார் கொள்ளையனான செம்புலிங்கத்தின் சாகஸ வரலாறு இந்நூல்.வாய்மொழித் தரவுகளின் அடிப்படையில் செம்புலிங்கத்தின் வரலாற்றை எழுதியுள்ள போதிலும் சற்றும் மிகைப்படுத்தாமல், நடுநிலைமையுடனும் சமூக ஆய்வு நோக்கிலும் இந்நூலை உருவாக்கியுள்ளார் பேராசிரியர் வெ.செந்திவேலு.