Description
காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ''பள்ளிகொண்டபுரம்'', நீல.பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்தன் நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில், கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய-இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது.''''மலையாள நாவலாசிரியர்களில் சிறந்த சிலர் தங்களது பிரபலமான இலக்கியப் படைப்புகளில் திருவனந்தபுரம் எனும் நகரை விளக்கமாய் வர்ணித்துள்ளார்கள். ஆனால், அவர்களுள் ஒருவராலும் - ஸி.வி.இராமன் பிள்ளையாலோ, தகழி சிவசங்கரப்பிள்ளையாலோகூட இந்த நகரின் ஆத்மாவைச் சிக்கெனப் பிடிக்க இயலவில்லை...ஆனால் திரு.நீல.பத்மநாபன் எனும் ஒரு தமிழ் நாவலாசிரியருக்குத்தான் கேரளத்துத் தலைநகரின் ஆத்மாவின் ஒரு பரிபூரண தரிசனத்தைப் பெற முடிந்திருக்கிறது'''' என்று மலையாள விமர்சகர் என்.வி.கிருஷ்ணவாரியரால் பாராட்டப்பட்ட நாவல் ''பள்ளிகொண்டபுரம்''.