Description
லா.ச.ரா குறித்து அவர் நண்பர் ஒருவர் தெரிவித்தக் கருத்தை எந்த மாற்றமும் இல்லாமல் லா.ச.ராவே இப்படி கூறுகிறார்.‘‘ஓ ராமாமிருதமா, சரிதான், எழுதிக்கொண்டேயிருப்பார். சிந்தனையோ சொல்லோ, இஷ்டமோ தடைப்பட்டால் அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர்பாட்டுக்குப் போய் கொண்டேயிருப்பார். இஷ்டத்துக்கு எங்கேயோ. One way Traffic.அவர் விலகமாட்டார். எதிராளிதான் ஒதுங்க வேண்டும். பிறகு நாளோ, மாதமோ, வருடமோ தடைப்பட்ட சொல் தட்டியப் பின் தான் விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடருவார். யார் கவலையும் கிடையாது. கோவில் மாடு! கோவில் மாடு! இப்படியே இவர் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார்!!எனக்கு உவகை பொங்குகிறது.