Description
"பிரபல வைத்தியனாக இருந்து, காங்கிரஸில் ஈடுபட்டு, சத்தியாக்கிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்க பன்முறை சிறை சென்ற, அரசாங்க மந்திரியாகச் சில காலம் உத்தியோகம் வகித்த நான் முதுமை பருவத்தில் என்னை விவசாயியாக எண்ணி இந்த கிராமத்தில் வாழ்வதற்குப் போய்ச் சேர்ந்தது ஒரு பெரிய விந்தை. எனது வரவை உத்ஸாகத்தோடு கிராமவாசிகள் வரவேற்கவில்லை.... அந்த ஊர் வேசிகளுக்குக் கூட என்னிடம் நன்மதிப்பு இல்லை......"