Description
அன்பே! தன்மீது இருக்கும் நம்பிக்கையை விட மாபெரும் ஆற்றல் வேறில்லை அதன் நறுமணம் இந்த உலகத்தை சேர்ந்ததல்ல அந்த நறுமணத்திலிருந்துதான் சாந்தி பரவசம் சத்தியம் பெருக்கெடுக்கின்றன.தன்னம்பிக்கை கொண்டவர் சுவர்க்கத்தில் இருப்பவர்.தன்னம்பிக்கை அற்றவர் நரகத்தின் சாவிகளைக் கையில் வைத்திருப்பவராவார்.ஸ்காட்லாந்தின் தத்துவஞானி டேவிட் ஹ்யூம் ஓர் நாத்திகர் ஆனால் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் தவறாமல் ஜான் பிரேளனின் பக்திப் பேருரை கேட்க ஆலயம் செல்வது வழக்கம்.தேவாலயம் செல்வது அவர் கொள்கைக்கு எதிராயிற்றே என்று பலர் கேட்ட போது அவர் சிரித்தார்.ஜான் பிரெளனின் சொல்வதை நான் நம்புவதில்லை ஆனால் அவர் தாம் சொல்வதை உறுதியாக நம்புகிறாரே!அதனால் வாரம் ஒருநாள் தன்னம்பிக்கையுள்ள ஒருவரின் பேச்சை நான் கேட்கிறேன் என்றார் அவர்