Description
எந்த ஒரு மொழி்யையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. அது மட்டுமல்ல அவன் தனக்கே துரோகமும் செய்து கொள்கிறான். வெறுப்பினால் பிற மொழிகளைப் படிக்காது விட்டு விடுபவன் அற்புதமான கருவூலங்களை இழந்து விடுகிறான். வடமொழி, ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். தமிழைப் போலவே தோன்றிய காலம் தெரியாத அந்த மொழியில் எவ்வளவு அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன. தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி இருக்கிறது. அவர்களுக்கு வடமொழிப் பயிற்சியும் இருக்குமானால் மற்றவர்களைத் திகைக்க வைக்கலாம். சபையில் நிமிர்ந்து நிற்கலாம். எழுத்தையே தொழிலாகக் கொள்ள முடியுமானால் உட்கார்ந்த இடத்திலிருந்தே சம்பாதிக்கலாம். இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும்,