Description
பாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. வீட்டுக்கு வீடு தலைவர்கள் வேண்டும். நாட்டின் ஒவ்வொரு சிறிய, பெரிய துறைகளிலும் தலைவர்கள் வேண்டும். அரசு, குடும்பம், தொழில், கலை முதலிய எல்லாத் துறைகளிலும் புதிய தலைமுறை தலைவர்கள் தோன்ற மாட்டார்களா என்று கனவு கண்டு வருபவன் நான்.. அந்தக் கனவே இதில் சுந்தரபாண்டியனாக உருப்பெற்றிருக்கக் கூடும் எனும் அகிலனின் கயல்விழியைப் பற்றிய கருத்து நாவலாசிரியரின் சமூக அக்கறையைப் படம் பிடிக்கிறது.