Description
மகான் புத்தருடைய பொன்மொழிகள் அடங்கிய தம்மபதம் என்ற நூலை பாலி மொழியிலிருந்து மேக்ஸ் முல்லர் மொழிபெயர்த்தார். அவர் அதுமட்டுமா செய்தார். சம்ஸ்கிருதத்திலிருந்து வேதங்கள், உபநிஷதங்கள் என்று இந்திய ஆன்மிக இலக்கியங்கள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். மூலமொழி கற்றுக்கொண்டுதான்! ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு குணம், அந்த்த் தளராத தீவிர முயற்சிதான். தம்மபத முதல் அத்தியாயத்தில் உள்ள முதல் பொன்மொழிதான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. வண்டியை இழுப்பதென்னவோ மாடுதான். ஆனால், சத்தம் போடுவதோ சக்கரங்கள் என்றும் இதைச் சொல்லுவார்கள்! அதிலும் ஓர் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. அரசியல் விமரிசனமாகக்கூட அதை எடுத்துக்கொள்ளலாம்!