Description
பயம் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. தனி மனிதனைப் பொறுத்தவரை பயம் என்பது வெற்றிக்குத் தடைக்கல்லாகும். பயத்தை வெல்வதை பற்றி பலரும் பலவாறான கருத்துகளைக் கூறியுள்ளனர். ஆனால் நிறுவனங்களில் ஏற்படும் பயத்தை வெல்வதற்கு நூலாசிரியர் தம்முடைய பல்லாண்டு பணி மூலம் சேர்த்த தகவல்களையும், அறிவார்ந்த ஆராய்ச்சி முடிவுகளையும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.
நிறுவனங்களில் பயம் ஏற்படுவதற்கான காரணங்கள் இலக்குகளை அடைய இயலாமை ஊக்கம், ஊக்க நிதி கிடைக்கப் பெறாமல் இருத்தல் முடிவெடுக்கும் சுதந்திரத்தை இழத்தல் மரியாதை மற்றும் மதிப்பு இழத்தல் என்று கூறுகிறார். பயம் என்பது பணியாளர்களையும், மேலாளர்களையும் தங்களைச் சுற்றி ஒரு தடையை ஏற்படுத்தி ஒருவரை வாட்டி, மற்றவரைத் தாக்கி, தங்களை உயர்த்தி பணியில் தொய்வு ஏற்படக் காரணமாகின்றது.
நிறுவனங்களில் பயம் ஏற்படுவதற்கான காரணங்கள் இலக்குகளை அடைய இயலாமை ஊக்கம், ஊக்க நிதி கிடைக்கப் பெறாமல் இருத்தல் முடிவெடுக்கும் சுதந்திரத்தை இழத்தல் மரியாதை மற்றும் மதிப்பு இழத்தல் என்று கூறுகிறார். பயம் என்பது பணியாளர்களையும், மேலாளர்களையும் தங்களைச் சுற்றி ஒரு தடையை ஏற்படுத்தி ஒருவரை வாட்டி, மற்றவரைத் தாக்கி, தங்களை உயர்த்தி பணியில் தொய்வு ஏற்படக் காரணமாகின்றது.