Description
ஏணிப்படிகளில் மாந்தர்கள்: இந்நூலாசிரியர் “சிவன் ஸ்வாமிகள்” என்றறியப்பட்ட ஒரு துறவி. காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரமடத்தின் மகாஸ்வாமிகளான ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸ்வாமிகளின் இளைய சகோதரர். ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு ஒரு கைவிளக்காக உதவும் அரிய நூல் இது. டெம்மி அளவில் 648 பக்கங்கள் உள்ள இந்நூலின் விலை ரூ. 350/- மட்டுமே. மனித ஆத்ம ரட்சாமிர்த செய்திகளை உள்ளடக்கிய இந்நூலில் மானுடப்பிறவி குறித்தும் உலக சமூக அமைப்பு பற்றியும் விஸ்தாரமாக விவரிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் வாழும் சமூகங்களின் பழக்க வழக்கங்கள், மனித கடைத்தேற்றத்திற்கு உதவிடும் குணநலன்கள், மனிதர்களிடையே உள்ள ஆன்மீக நிலை ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி விளக்கமும் அளிக்கும் ஆன்மிக அகராதி இது.