Description
வேத முதல்வனே விருத்தனாகித் தலையில் காலால் மிதித்து இருமுறை இயற்றித் தோழமை காட்டிட, கண்ணிழந்தும் கவிபாடி உலகோரின் கண் திறந்தது சுந்தரர் தேவாரம். பக்திப் பனுவல் மட்டுமன்று சிறந்த வரலாற்றுப் பெட்டகமும் கூட. ஏழாந்திருமுறையாக அமைவது சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரமாகும். மொத்தப் பாடல்கள் - 1028