Description
திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகள் தொகுத்த பதினொராம் திருமுறை மூலமும் - உரையும். பன்னிரு சான்றோர்களால் இயற்றப் பெற்ற நாற்பது சிற்றிலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டு சைவ பிரபந்தத் திரட்டாய் பொலிந்து நிற்கின்றது. ஏனைய திருமுறைகளுக்கு இல்லாத சிறப்பு ஒன்று இதற்கு உண்டு. ஆலவாய் இறைவர் இயற்றிய திருமுகப்பாசுரம் இந்த தொகை நூலின் முதலில் திகழ்கிறது. மொத்தப் பாடல்கள் - 1401.