Description
சேக்கிழார் அருளிய பெரியபுராணம் மூலமும் - உரையும். 12ஆம் திருமுறை. தொண்டர் தம் பெருமையைச் சொல்லிடவும், எழுதிடவும் இயலுமோ? தொண்டர்சீர் பரவுவாரான சேக்கிழார் பெருமான் சைவ அடியவர்களைப் பற்றி உள்ளது உள்ளபடி எடுத்துக்கூறிய மெய்ந்நூலே திருத்தொண்டர் புராணம் எனப் பெறும் வரலாற்றுக் காப்பியமான பெரியபுராணம். இந்நூல் நமது சைவ சமயத்தின் 12 ஆம் திருமுறையாக விளங்கும் பெருமை கொண்டது. மொத்தப் பாடல்கள் - 4286