யானை பறந்தபோது


Author: ரமேஷ் வைத்யா

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 100.00

Description

இந்த நூல் முழுக்க இருக்கிற கதைகளில் எதுவுமே நமக்கு எதையுமே போதிப்பது இல்லை. பொய் பேசாதே; திருடாதே; நேர்மையாக இரு; மற்றவர்கள்மீது மரியாதை வை என நமக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது இல்லை. அதனால்தான் இந்தக்கதைகள் நமக்கு மிகவும் பிடிக்கின்றன. அறிவுரை சொல்லுகிற ஆளை யாருக்குத்தான் பிடிக்கும். ரமேஷ் வைத்யா மாமாவுக்கு அறிவுரை சொல்வது பிடிக்காது போல. கதைகள் மட்டும்தான் சொல்கிறார். அதுவும் எளிமையான மொழியில் அழகாகச் சொல்கிறார். எங்குமே எதுவுமே நமக்குப் புரியாமல் போகக்கூடாது என்று பார்த்துப் பார்த்து எழுதியிருக்கிறார். இந்தக் கதைகள் எல்லாமே நீங்கள் மட்டுமே படிக்கவேண்டிய கதைகள் இல்லை. இதை உங்கள் அப்பா அம்மாவுக்கும் அண்ணன் அக்காக்களுக்கும் படிக்கக் கொடுங்கள். நிச்சயமாக அவர்களுக்கும் இந்தக் கதைகள் ரொம்பப் பிடிக்கும்.

You may also like

Recently viewed