Description
பெண்களின் வரலாறு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது அல்லது புறக்கணிக்கப்படுகிறது. ஆணாதிக்கம் கோலோச்சிய காலத்தில் அடிமைத்தளையை அறுத்துக்கொண்டு வெளியேறுவதே பெண்களுக்கு மாபெரும் சாதனையாக இருந்தது. அதிலும் தனித் திறமையால் தேர்ந்தெடுத்த துறைகளில் சாதித்த 45 பெண்கள் குறித்த தொகுப்பு இந்நூல். அரசியல், சமூகம், பொருளாதாரம் என நாட்டைக் கட்டமைக்கும் அனைத்திலும் பெண்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முதல் அடியை எடுத்துவைக்கிறவர்களுக்குச் சமூகம் மலர்ப்பாதையை அமைத்துக் கொடுப்பதில்லை. சோதனைகள் பலவற்றைக் கடந்துதான் அவர்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது. இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளும் அதைத்தான் உணர்த்துகின்றன.