Description
பாரதியார் தமிழ் வழிக் கல்வி பற்றிய கருத்து, சாதி ஏற்றத் தாழ்வுகள் பற்றி அவருடைய பார்வை, பெண் சுதந்திரம், தேசப் பற்று குறித்த அவருடைய கருத்துகள், பாரதி விரும்பிய குடியாட்சிமுறை, பொதுவுடமை குறித்த அவருடைய எண்ணம், பிற மொழி இலக்கியங்கள் குறித்த அவருடைய பார்வை என பல்வேறு பரிமாணங்களில் பாரதியை இந்நூல் பார்க்கிறது. பாரதியின் படைப்புகளில் இருந்து பல சுவையான பகுதிகளை எடுத்துக்காட்டுகளாக நூலாசிரியர் கூறியிருப்பது, பாரதியைப் பற்றிய பல புதிய வெளிச்சங்களை நமக்குள் பாய்ச்சுகிறது. பாரதியின் மறைவுக்குப் பிறகும் அவருடைய தாக்கம் எந்த அளவுக்கு தமிழ் இலக்கிய உலகில் இருந்தது என்பதையும், அவர் வழித்தோன்றல்களான கவிஞர்களையும் படைப்பாளிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. பாரதியாரைப் பற்றிய தெளிவான புரிதலை வந்தடைய இந்நூல் உதவும்.