Description
இந்திய இலக்கிய வரலாற்றில் மட்டுமல்ல. உலக இலக்கிய வரலாற்றிலும் இந்த ஜாதகக் கதைகள் மிக முக்கியமான இடம் பெற்றுள்ளன. பல நூற்றாண்டுகளாக இந்தக் கதைகள் பல சமூகங்களில் அன்பையும் கருணையையும் அமைதியையும் பண்படுத்தி வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளன. சுயம் என்கிற உணர்வையே பெரும்பாலும் மக்கள் பற்றிக்கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் குழந்தைகளும் இளைஞர்களும் மட்டுமல்ல பெரியவர்களும் இந்தக் கதைகளைப் படிப்பதோ அல்லது கேட்பதோ மிக்க பயனுடையதாக இருக்கும். இவை மக்களின் மனங்களில் அன்பு, கருணை, தன்னலத் தியாகம், பொறுமை. மெய்யறிவு போன்ற மேன்மையான பண்புகளின் விதைகளைப் பதிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தத் தமிழாக்கம் Buddhist Tales for Young and Old என்கிற ஆங்கில நூலை அடிப்படையாகக் கொண்டதாகும்.