Description
நாராயண குருவின் வழித்தோன்றலான குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் குழந்தைகளை மையமிட்டு மலையாளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். எழுத்தாளுமை யூமா வாசுகி அவர்களால் இந்நூல் முதன்முதலில் தமிழுக்கு அறிமுகமாகிறது. இதிலுள்ள ஒவ்வொரு கருத்துகளும், அனுபவங்களும் தன்னளவில் ஒவ்வொரு ஞானங்கள். கோட்பாடுகளின்படி அல்லாது இயல்பாய் குழந்தைகளின் வாழ்வுப்போக்கில் அமைந்த சில தரிசனத் தருணங்களை இந்நூல் வழியாக நமக்கு வெளிச்சப்படுத்தி உருப்பெருக்கிக் காட்டித்தருகிறார் யதி.