Description
அரசியல் துறையில் இருந்தபடி எழுத்தை ஓர் ஆயுதமாகக் கையாள்வதற்குத் தமிழ்நாட்டில் நெடிய ஒரு மரபு உண்டு. எழுத்துத் துறையில் இருந்தபடி அரசியலை ஓர் ஆயுதமாகக் கையாளுவதில் தோழர் ரவிக்குமார் ஒரு முன்னோடி என்றே சொல்லத் தோன்றுகிறது. வெகுமக்களின் சமகளத்தையும், சிந்தனையாளர்களின் தொலைநோக்கையும் அவர் ஒன்றிணைத்துத் தருகிறார். ஒவ்வொரு அரசியலரும் திறம்படச் செயல்பட வேண்டும் என்றால், இன்றைக்கு எவ்வளவு வாசிக்கவும், அறிந்துகொள்ளவும், விவாதிக்கவும் அயராது உழைக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து சுட்டுபவை ரவிக்குமாரின் எழுத்துகள்.