Description
உலகமெலாம் பரவியிருக்கும் ஈழத் தமிழரின் புலப்பாடுகளை அவர்களின் வீடு திரும்புதல் குறித்த எதிர்காலத்திற்கான கேள்விகளாக்கி வரும் அநேக பிரதிகளுக்கு மத்தியில், ஈழத் தமிழர்களுக்கும் இங்குள்ள எளிய உழைக்கும் மக்களுக்குமிடையே வாழ்வை சமன் செய்துக்கொள்ளும் பார்வையில் தாய்த தமிழகத்திலும் கைவிடப்படும் ஏதிலிகளை இவர் கவிதைகள் அடையாளம் காட்டுகின்றன. சார்பு வாழ்வு என்பது கவிஞர்களைப் பொறுத்தவரையில் எப்போவு தனித்து இருந்தாலும் தன் குரலால், மொழியால், சிந்தனையால் பொதுத்தளத்தின் மீதே அக்கறை கொண்டிருக்கும் என்பதற்கு சுகன்யா ஞானசூரியின் கவிதைகளும் பொருந்துகின்றன,
– யவனிகா ஸ்ரீராம் அணிந்துரையில்