Description
கடந்த ஜூலை மாதம், மலேசியா நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் 11-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட் டையொட்டி தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் உருவாக்கிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு சிறப்பு மலராக வெளியிடப்பட்டு இருக்கிறது. திராவிடம் என்ற பண்பாட்டு அடையாளம், அழியும் நிலையில் இருக்கும் மொழிகள், தமிழ்க் கவிதைகள் உருவான விதம், பழங்கால இசைக் கருவிகள், மொழி பெயர்ப்புக் கவிதைகள், கரிசல் வட்டார இலக்கிய ஆளுமைகள், சிறார் இலக்கி யம், சங்க நூல்களின் மரபு, தமிழர் காலக் கணிப்பு, எதிர்கால இணையத் தமிழ் உள்ளிட்ட பல கருத்துகளைக் கொண்ட கட்டுரைகள், தமிழ் அறிஞர்களின் கருத்துக் கருவூலமாக இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கோலாலம்பூர், மலேசியா