Description
மூங்கில் திரை நாடென்ற பெயர் உண்டு மண்மூடிக் கிடக்கின்ற பெருமை உண்டு தமிழ் மன்னர் கட்டிவைத்த பெருங்கோயில் தரணியெல்லாம் புகழ்பெற்ற அங்கோர் வாட்! இன்றோ கால் வைத்த இடமெல்லாம் கன்னி வெடிகள் கை, கால்கள் கண்ணிழந்தோர் கணக்கில்லை அதிகாரம் அகம்பாவம் அட்டூழியம் அதன் விளைவால் போன உயிர் எத்தனையோ… (2) இத்தனைக்கும் மத்தியில் கம்போடியா இயற்கை தந்த வளத்தாலே மிளிர்கின்றது. எளிய மனிதர்களின் அருமை விருந்தோம்பல் இன்னும் பலவுண்டு வரிசைப்படுத்துகின்றேன் இந்தப் புத்தகம் கையிலிருந்தாலே போதும்!